states

img

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை தொடர் சோதனை

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகிய மத்திய அமைப்புகள் மூலம் “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிராக சம்மன், சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை ஒன்றிய மோடி அரசு அரங்கேற்றி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு  வங்க மாநிலத்தில் தொடர் சோதனை யில் ஈடுபட்டு அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது அமலாக்கத்துறை. இந்த வார தொடக்கத்தில் ரேஷன் ஊழியர் தொடர்பாக பல்வேறு சோதனை, கைது, வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், வெள்ளியன்று பள்ளி ஊழி யர் நியமன மோசடி தொடர்பாக அம்மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சுஜித் போஸின்  கொல்கத்தாவில் உள்ள வீட்டில் அம லாக்கத் துறையினர் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் சுஜித் போஸ் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான தபஸ்ராய் மற்றும் வடக்கு தும் தும் நகராட்சி முன்னாள் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.